Tuesday, January 4, 2011

கிளிநொச்சியில் 28 பாடசாலை மாணவர்கள் கடத்தல்:

கிளிநொச்சியில் 28 பாடசாலை மாணவர்கள் கடத்தல்: தப்பி வந்தவர்கள் மூலம் சம்பவம் வெளியில் கசிந்தது



[ செவ்வாய்க்கிழமை, 04 சனவரி 2011, 07:43.31 AM GMT +05:30 ]


கிளிநொச்சியில் கடந்த இரண்டாம் திகதி பாடசாலை மாணவர்கள் 28 போ் கடத்தப்பட்டது குறித்து தப்பிவந்த மாணவர்கள் மூலமாக வெளியில் தெரியவந்துள்ளது.


கடத்தப்பட்ட 28 மாணவர்களில் 27 போ் தப்பிவந்துள்ளனர். அவர்கள் மூலமாக மாணவர்கள் கடத்தப்பட்ட செய்தி வெளியில் தெரிந்துள்ளது. அதே நேரம் எஞ்சிய ஒரு மாணவரின் நிலை குறித்து நேற்று மாலை வரை எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.






கடந்த இரண்டாம் திகதி காலைவேளையில் கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது. எட்டுப் போ் கொண்ட குழுவொன்றே மாணவர்களைக் கடத்தி பஸ்ஸொன்றில் அழைத்துச் சென்றுள்ளனர்.






கடத்தியவர்கள் ஆயுதங்களுடன் காணப்பட்டதாக கடத்தப்பட்டு தப்பி வந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கடத்தல்காரர்களைக் கண்டுபிடிக்க பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கிளிநொச்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்






No comments:

Post a Comment